இங்கிலாந்து அரசி, திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு ஏப்ரல் 3,2014
பிப்.04,2014. பிரிட்டன் அரசி எலிசபெத் அவர்கள், வருகிற ஏப்ரல் 3ம் தேதி திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்திப்பார் என திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்துள்ளது. இத்தாலிய
அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ அவர்களின் அழைப்பின்பேரில் உரோம் நகர் வரும் அரசி
எலிசபெத் அவர்கள், இத்தாலிய அரசுத்தலைவருடன் மதிய உணவு அருந்துவார், பின்னர் வத்திக்கானுக்கு
வந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசி
எலிசபெத் அவர்களுடன் எடின்பெர்க் பிரபுவும் வருகை தருவார் எனவும் அரசியின் பத்திரிகை
அலுவலகச் செயலர் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. மேலும், அன்பு இளையோரே, இயேசு நமக்கு
வாழ்வை அளிக்கிறார், அதை அபரிவிதமாக அளிக்கிறார், நாம் அவருக்கு நெருக்கமாக இருந்தால்,
நம் இதயங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் மற்றும் நம் முகங்களில் புன்சிரிப்பு இருக்கும்
என்று இச்செவ்வாயன்று தனது Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.