திருத்தந்தையின் திங்கள் மற்றும் ஞாயிறு டுவிட்டர் செய்திகள்
பிப்.03,2014. 'நம்பிக்கைக்குரிய நல்ல நண்பர்களைக் கொண்டிருப்பது அவசியம். ஆனால், நம்மை
எப்போதும் கைவிடாத இறைவனில் நம்பிக்கைக் கொள்வது இன்றியமையாத ஒன்று’ என, தன் டுவிட்டர்
பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், அர்ப்பண
வாழ்வுக்கான உலக நாளான இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
' இயேசுவே நம் வாழ்வின் மையநிலை என்பதை மீண்டும் கண்டுகொள்ள இந்த அர்ப்பண வாழ்வுக்கான
உலக நாள் சரியான நேரமாக இருப்பதாக' என எழுதியுள்ளார்.