சன.31,2014. இந்தியாவின் பாட்னாவின் முதல் பேராயர் Benedict John Osta அவர்கள் இவ்வியாழனன்று
இறைபதம் எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். இயேசு சபையைச் சார்ந்த பாட்னாவின்
முன்னாள் பேராயர் Benedict John Osta அவர்களின் இறுதி அடக்கச்சடங்கு, பிப்ரவரி 1, இச்சனிக்கிழமை
பிற்பகல் 2 மணிக்கு Kurji, திருத்தூதர் ஆலயத்தில் நடைபெறும். 1950ம் ஆண்டு ஜூலை 20ம்
தேதி இயேசு சபையில் சேர்ந்த இவர், 1963ம் ஆண்டில் குருவானார். 1980ம் ஆண்டு ஜூன் 21ம்
தேதி பாட்னா ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். 1999ம் ஆண்டில் பாட்னா உயர்மறைமாவட்டமாக
உயர்த்தப்பட்டபோது அதன் முதல் பேராயரானார் Benedict John Osta. 2007ம் ஆண்டில்
தனது 75வது வயதில் பணி ஓய்வு பெற்றார் பேராயர் Benedict John Osta.