2014-01-31 15:46:02

திருத்தந்தை பிரான்சிஸ் : எவரும் தன்னையே மீட்பதில்லை


சன.31,2014. எவரும் தன்னையே மீட்பதில்லை, கிறிஸ்தவ வாழ்வில் சமூகக்கூறு இன்றியமையாதது என்று இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், Neocatechumens என்ற தொடக்க காலக் கிறிஸ்தவர்களின் வாழ்வுமுறையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கத்தோலிக்கப் பக்த இயக்கத்தின் ஏறக்குறைய பத்தாயிரம் பேரை இச்சனிக்கிழமையன்று சந்திக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்பின்போது, இவ்வியக்கத்தின் 414 குடும்பங்களை ஆசீர்வதித்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு, குறிப்பாக, ஆசியாவுக்கு, மறைப்பணியாளர்களாக அனுப்பவுள்ளார் திருத்தந்தை.
இச்சந்திப்பில் இக்குடும்பங்களின் 900 குழந்தைகளும் பங்குகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Neocatechumens கத்தோலிக்கப் பக்த இயக்கம் 1960களில் இஸ்பெயினில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/ANSA







All the contents on this site are copyrighted ©.