இந்தியாவின் பொதுத் தேர்தல்களுக்காக கிறிஸ்தவர்கள் செபம், உண்ணா நோன்பு
சன.31,2014. இந்தியாவில் பொதுத் தேர்தல்களுக்குப் பின்னர் நிலையான ஓர் அரசு அமைய வேண்டும்
என்பதற்காக, பல கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த ஏறக்குறைய 80 கிறிஸ்தவர்கள் 72 மணி நேர செப
மற்றும் உண்ணா நோன்பை மேற்கொண்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலுக்கு
அருகில் கோவிந்தபுராவில் இப்புதனன்று தொடங்கியுள்ள இச்செப நடவடிக்கையை அருள்பணி அனில்
மார்ட்டின் தலைமை வகித்து நடத்துகிறார். தேசியக் கிறிஸ்தவக் கூட்டமைப்பால் இதேபோன்ற
செப மற்றும் உண்ணா நோன்பு நடவடிக்கை இந்தியாவின் ஏறக்குறைய 72 மாவட்டங்களில் நடத்தப்படுகின்றன.