2014-01-30 16:09:49

முதியோர் இல்லத் தீ விபத்துக்கு, திருத்தந்தை அனுதாபச் செய்தி


சன.30,2014. சனவரி 22, கடந்த புதனன்று, கனடாவின் Quebec பகுதியில் வயது முதிர்ந்தோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் அனுதாபத் தந்தி அனுப்பியுள்ளார்.
திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் பேராயர் Pietro Parolin அவர்கள், பேராயர் Pierre André Fournier அவர்களுக்கு அனுப்பியுள்ள இந்தத் தந்திச் செய்தியை Quebec ஆயர் பேரவை, தன் இணையதளத்தில் இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது.
சனவரி 22 இரவு, L'Isle-Verte என்ற இடத்தில் ஏற்பட்ட இத்தீவிபத்தில், பத்து பேர் இறந்துள்ளனர் என்றும், இன்னும் 22 பேரின் நிலை அறியப்படாமல் உள்ளதென்றும் செய்திகள் கூறுகின்றன.
இத்தீவிபத்தின் காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அப்பகுதியில் நிலவும் கடும் பனிப் பொழிவினால் துயர்துடைப்புப் பணிகள் தாமதமாகியுள்ளன என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.