2014-01-29 16:19:26

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழும் வழிகளைத் தேடவேண்டும் - கிறிஸ்தவர்கள்


சன.29,2014. பாகிஸ்தானில் கிறிஸ்தவ சாட்சியம் வெளிப்பட வேண்டுமெனில், முதலில் அங்குள்ள கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழும் வழிகளைத் தேடவேண்டும் என்று பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கிறிஸ்தவ ஒன்றிப்புக்கென வேண்டுதல்களை எழுப்பும் வாரம் அண்மையில் நடைபெற்றதையொட்டி, பாகிஸ்தான், லாகூரில் நடைபெற்ற ஓர் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் இக்கருத்து வெளியானது.
வேறுபாடுகள் இருப்பது அழகுதான் என்றாலும், அந்த வேறுபாடுகள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கும் வழிகளையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அருள் பணியாளர் Moris Jalal அவர்கள் கூறினார்.
வாழ்வாலும், வார்த்தைகளாலும் இறை வார்த்தையை அறிவிக்கும் கடமையில் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் இணைந்து உழைக்க வேண்டும் என்பதை ஆங்கிலிக்கன் சபையின் முன்னாள் ஆயர் Manu Romal Shah அவர்கள் வலியுறுத்தினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.