2014-01-28 16:21:25

கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காகச் செபிக்க டுவிட்டரில் திருத்தந்தை அழைப்பு


சன.28,2014. 'கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காகச் செபிப்போம். நம்மை ஒன்றிணைப்பதற்கு அழகான அரிய விடயங்கள் பல உள்ளன' என இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து கத்தோலிக்க திருஅவை நடத்திய கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான செப வாரம் கடந்த சனிக்கிழமையன்று நிறைவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.