2014-01-27 15:59:52

புனிதர் பட்ட நிலைக்கான படிகளுக்கென எட்டுபேரின் பெயர்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பிப்பு


சன.27,2014. இஸ்பெயினில் பிறந்து, இந்தியாவின் தமிழகத்தில் உயிரிழந்த, கார்மல் துறவு சபையின் புனித தெரேசாவின் சக்கரியா என்ற அருட்பணியாளர் உட்பட, ஏழு இறைடியார்களின் பெயர்கள், அவர்களின் வீரத்துவ பண்புகளுக்காகவும், மறைசாட்சியாக உயிரிழந்த இஸ்பானிய அருட்பணியாளர் ஒருவரின் பெயரும், புனிதர்பட்டநிலைக்கான படிகளுக்கென இத்திங்களன்று திருத்தந்தையின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டன.
தற்போது வீரத்துவ பண்புகளுக்காக புனிதர்பட்ட நிலைகளுக்கென சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஏழு இறையடியார்களுள், கார்மல் துறவுசபையின் அருட்திரு சக்கரியா அவர்கள், 1887ம் ஆண்டு இஸ்பெயினில் பிறந்து, 1957ம் ஆண்டு, மேமாதம் 23ம் தேதி தமிழகத்தின் வேலூரில் காலமானார்.
இவர் பெயருடன் இணைந்து, இத்தாலியின் வெரோனாவில் பிறந்த மறைமாவட்ட குரு. ஜூசப்பே ஜிரல்லி, கானடாவின் இறையடியார், அருட்சகோதரி Marcella Mallet, அர்ஜென்டினாவின் இறையடியார் அருட்சகோதரி Maria Benedetta Arias, மால்ட்டாவின் இறைடியார், அருட்சகோதரி இயேசுவின் திரு இதயத்தின் மார்கரித்தா, பிரசிலின் இறையடியார், அருட்சகோதரி செரஃபீனா, இத்தாலியின் இறையடியார், பொதுநிலையினரான Elisabetta Sanna ஆகியோரின் பெயர்களும் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும், மறைசாட்சியாக உயிரிழந்த இஸ்பெயினின் அருட்திரு Pietro Asúa Mendíaவின் பெயரும், புனிதர்பட்ட நிலைக்கான படிகளுக்கென திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.