சன.27,2014. 'இளையோரே! தரம் குறைந்த வாழ்வில் நிறைவுகாணாதீர்கள். உண்மையானதும், அழகு
நிரம்பியதும், கடவுளுக்குரியதுமான வாழ்வுகுறித்து வியப்புகொள்ளுங்கள்' என இத்திங்களன்று
தன் டுவிட்டர் பக்கத்தில் இளைஞர்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்குமில்லாமல்,
இங்குமில்லாமல், இடைப்பட்ட, தரம் குறைந்த வாழ்வில் திருப்தி அடையாமல், இறைவனின் வழிகாட்டுதலை
நோக்கிச் செல்வோம் என தன் டுவிட்டர் பக்கத்தில் இளையோருக்கு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை.