திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனுக்கு நன்றி சொல்லி அவரை வணங்க எப்பொழுது நாம் கற்றுக்கொள்ளப்போகிறோம்?
சன.25,2014. நமக்குத் தேவையானவற்றை இறைவனிடம் கேட்பது எளிது; அதை நாம் செய்து வருகிறோம்.
ஆனால், இறைவனுக்கு நன்றி சொல்லி அவரை வணங்க எப்பொழுது நாம் கற்றுக்கொள்ளப்போகிறோம்? என்று
இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும்,
2015ம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடைபெறவுள்ள 8வது உலக குடும்பங்கள்
மாநாட்டுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்லக்கூடும் என, அந்நாட்டுத் தேசிய
கத்தோலிக்க இதழ் நிருபர் ஜான் ஆலென் தெரிவித்துள்ளார். 8வது உலக குடும்பங்கள் மாநாடு
பிலடெல்பியாவில் நடைபெறும்.