நேர்காணல் – மலங்கரா ஜாக்கபைட் சிரியன் ஆர்த்தடாக்ஸ் சபை
சன.23,2014. ஆண்டுதோறும் சனவரி 18 முதல் சனவரி 25 வரை கிறிஸ்தவ சபைகள் கிறிஸ்தவ ஒன்றிப்பு
வாரத்தைக் கடைப்பிடிக்கின்றன. கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா?(1கொரி.1,13) என்ற
தலைப்புடன் இவ்வாண்டு இவ்வொன்றிப்பு வாரம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வாரத்தையொட்டி
அருள்பணி குரியாக்கோஸ் கொல்லனூர் அவர்களைச் சந்திப்போம். இவர் கேரளாவின் மலங்கரா ஜாக்கபைட்
சிரியன் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையில் 8 ஆண்டுகளாக குருவாகப் பணியாற்றி வருகிறார்.