மனித வாழ்வுக்கு ஆதரவான பாரிஸ் பேரணிக்கு திருத்தந்தை ஆதரவு
சன.18,2014. பிரான்ஸ் நாட்டின் பாரிசில் இஞ்ஞாயிறன்று இடம்பெறவிருக்கும் மனித வாழ்வுக்கு
ஆதரவான மாபெரும் பேரணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். பிரான்சுக்கான
திருப்பீடத் தூதர் பேராயர் Luigi Ventura அவர்கள் பேரணி நடத்துனர்களுக்கு அனுப்பிய செய்தியில்,
இப்பேரணி குறித்து திருத்தந்தைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாகவும், மனித வாழ்வை ஆதரிக்கும்
முக்கியமான பணிக்கு அனைவரும் தொடர்ந்து தங்களை அர்ப்பணிக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும்
கூறப்பட்டுள்ளது. சனவரி 22, இஞ்ஞாயிறன்று பாரிசில் நடைபெறவிருக்கும் மனித வாழ்வுக்கு
ஆதரவான மாபெரும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளவுள்ளனர்.