சன.18,2014. சிரியாவில் அமைதி குறித்த 2ம் கட்ட உலகக் கருத்தரங்கு வருகிற புதனன்று நடைபெறவுள்ளதை
முன்னிட்டு, WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் ஏறத்தாழ 30 தலைவர்கள் ஜெனீவாவில்
கூட்டத்தை நடத்தி வருகின்றனர். சிரியாவில் நடைபெற்றுவரும் ஆயுதம் ஏந்திய மோதல்களை
முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு இக்கிறிஸ்தவ சபைகளின்
தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் நடத்தும் இக்கூட்டத்தில்,
திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean Louis Tauran அவர்களும், ஜெனீவாவிலுள்ள
ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி
அவர்களும் கலந்து கொள்கின்றனர். ஐ.நா.வின் அரபுக் கூட்டமைப்பின் சிரியா பிரதிநிதி
Lakhdar Brahimi அவர்களும் இக்கூட்டத்தில் செய்தி வழங்குகிறார்.