2014-01-18 15:20:59

சிரியா குறித்த அமைதிக் கருத்தரங்கு வெற்றியடையச் செபிக்குமாறு முதுபெரும் தந்தை வேண்டுகோள்


சன.18,2014. வருகிற புதனன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் சிரியாவில் அமைதி குறித்த உலகக் கருத்தரங்கு வெற்றியடையச் செபிக்குமாறு கேட்டுள்ளார் சிரியாவின் மெல்கிதே வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் தலைவர் முதுபெரும் தந்தை Gregoire Laham.
சிரியாவில் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் உலகத் தலைவர்கள் இம்மாதம் 22ம் தேதி 2வது தடவையாக ஜெனீவாவில் கூடவுள்ளனர்.
ஏறத்தாழ 30 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இவ்வுலகக் கருத்தரங்கு வெற்றியடைய உருக்கமாகச் செபிக்குமாறு உலகினரைக் கேட்டுள்ளார் முதுபெரும் தந்தை 3ம் Laham.
சிரியாவில் இடம்பெற்றுவரும் சண்டையில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 68 இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.