2014-01-17 15:43:35

பயங்கரவாதிகளுடன் பலனற்ற பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபடக் கூடாது, பாகிஸ்தான் ஆர்வலர்கள்


சன.17,2014. பயங்கரவாதிகளுடன் பலனற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நாடெங்கும் பயத்தையும் வன்முறையையும் பரப்பும் பயங்கரவாதத்துக்கு ஏதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர் பாகிஸ்தான் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூக ஆர்வலர்கள்.
இஸ்லாம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இளம் மாணவர் Aitzaz Hassan, இரகசிய காவல்துறை அதிகாரி Chaudhry Aslam Khan ஆகிய இருவரின் நினைவாக இடம்பெற்ற மெழுகுதிரி வழிபாட்டில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர்கள், பாகிஸ்தானில் பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்துவதற்குச் சரியான யுக்திகளைக் கையாளுமாறு அரசை வற்புறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் முழுவதும் பல தன்னார்வ அமைப்புகள் இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டு அந்நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதற்குக் குரல் கொடுத்தனர்.
Hanguவைச் சேர்ந்த இளம் மாணவர் Aitzaz Hassan பயங்கரவாதத்துக்கு ஏதிராகப் போராடியவர்.

ஆதாரம் : AsiaNews









All the contents on this site are copyrighted ©.