எல் சால்வதோர் நாட்டில் பேராயர் ரொமேரோ அவர்களைக் கவுரவிக்கும் புதிய நடவடிக்கைகள்
சன.17,2014. எல் சால்வதோர் நாட்டின் முன்னாள் பேராயர் ஆஸ்கார் ரொமேரோ அவர்களைக் கவுரவிக்கும்
பல புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார் அந்நாட்டு அரசுத்தலைவர் Mauricio Funes. பேராயர்
ரொமேரோ அவர்களை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கான முயற்சிகள் கடந்த ஆண்டு
ஏப்ரல் 20ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அப்பேராயரைக் கவுரவிக்கும் பல புதிய
நடவடிக்கைகளை அறிவித்துள்ள அரசுத்தலைவர் Funes, பேராயர் ரொமேரோ அவர்கள், எல் சால்வதோரின்
ஆன்மீகத் தலைவர் எனக் குறிப்பிட்டுள்ளார். சான் சால்வதோரில் 1980ம் ஆண்டு மார்ச் 24ம்
தேதி திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட பேராயர் ரொமேரோவின்
பெயரை அரசுத்தலைவர் மாளிகையிலுள்ள முக்கிய அறைக்குப் வைத்துள்ளதோடு, அந்நாட்டின் பன்னாட்டு
விமானநிலையத்துக்கும் பேராயர் ரொமேரோவின் பெயரை வைப்பதற்குத் திட்டமிட்டு வருகிறார் அரசுத்தலைவர்
Funes. 1977ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி பிறந்த பேராயர் ரொமேரோ அவர்களின் நூற்றாண்டு
விழா 2017ம் ஆண்டில் சிறப்பிக்கப்படும்வேளை, பேராயர் ரொமேரோ அவர்கள் விரைவில் புனிதராக
அறிவிக்கப்படுவார் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் திருப்பீட குடும்ப அவைத் தலைவர்
பேராயர் Vincenzo Paglia.