திருத்தந்தை : இறைவனின் அன்பை நாம் புரிந்துகொள்ளத் தவறினாலும் அவர் நம்மைக் கைவிடுவதில்லை
சன.13,2014. இறைவனின் அன்பை நாம் புரிந்துகொள்ளத் தவறினாலும், அந்த அன்பு, நம் பாவ வரலாற்றை
நோக்காமல், நம்மை என்றென்றும் கைவிடாமல் கரையேற்றுகிறது என இத்திங்களன்று காலை புனித
மார்த்தா இல்லச் சிற்றாலயத் திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவால்
தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களும் தவறுச் செய்தார்கள், ஒருவர் மறுதலித்தார், மற்றவர்கள்
பயத்தால் அவரைவிட்டு விலகி ஓடினார்கள், இருப்பினும் அவர்களுக்கானப் பாதையை இறைவன் தயாரித்துக்
கொடுத்தார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ், நமக்காகவும் அப்பாதையை தலைமுறை தலைமுறையாக அவர்
தயாரித்து வைத்துள்ளார் என்றார். இறைவன் நம்மீது கொண்டிருக்கும் அன்பைப் புரிந்துகொள்ள
உதவுமாறு அவரை நோக்கி மன்றாடுவோம், ஏனெனில் அவர் நம் வாழ்வில் நம்மைத் தயாரிப்பதோடு,
நம்மோடு இணைந்து நடைபோடுகின்றார் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.