2014-01-11 15:39:05

2013ம் ஆண்டில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இருமடங்கு


சன.11,2014. 2013ம் ஆண்டில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2012ம் ஆண்டைவிட இருமடங்காக உள்ளது என, ஆண்டு கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.
2013ம் ஆண்டில் சிரியாவில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, 2012ம் ஆண்டில் உலக அளவில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் எனவும் Open Doors என்ற, ஒடுக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவான ஒரு கிறிஸ்தவ அமைப்பின் கணக்கெடுப்பு கூறுகிறது.
2012ம் ஆண்டில் 1,201 பேர் கிறிஸ்தவ விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்டுள்ளவேளை, இவ்வெண்ணிக்கை 2013ம் ஆண்டில் 2,123 எனவும் அக்கணக்கெடுப்பு மேலும் கூறுகிறது.
2013ம் ஆண்டில் ஏறக்குறைய பத்து கோடிக் கிறிஸ்தவர்கள் விசுவாசத்துக்காகத் துன்புறுத்தப்பட்டனர் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் Open Doors அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.