கனிவுடன் வரவேற்கும் பண்புகள், நற்செய்திக்குச் சான்று பகர்கின்றன, திருத்தந்தை பிரான்சிஸ்
சன.10,2014. மென்மையான மற்றும் கனிவுடன் வரவேற்கும் பண்புகள், கிறிஸ்தவ விசுவாசத்தால்
உந்தப்பட்ட ஒரு வாழ்வில் உண்மையான மூலத்தைக் கொண்டிருக்கின்றன மற்றும் இப்பண்புகள் உலகப்போக்கின்
எவ்விதக் கறையுமின்றி நற்செய்திக்குச் சான்று பகர்கின்றன என்று கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ். வத்திக்கானில் திருத்தந்தையரைச் சந்திக்கவரும் பல்வேறு தலைவர்களையும்
அதிகாரிகளையும் முதலில் வரவேற்கும் gentiluomini என்ற குழுவினரையும் அவர்களது குடும்பத்தினரையும்
இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டபோது
இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்மஸ் காலத்தின் நிறைவில் இருக்கும்
நாம், பெத்லகேம் குகையில் கடவுள் குழந்தையாகப் பிறந்த வியப்பினால் மிகுந்துள்ளோம் என்றுரைத்த
திருத்தந்தை, நம்மில் ஏற்பட்டுள்ள இந்த அக ஒளியை, நம் அன்றாட வாழ்விலும், பணியிலும்,
குடும்பத்திலும் காட்டுவோம் எனக் கேட்டுக்கொண்டார்.