நேர்காணல் – சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்ட முதல் ஆயருடன் ஒரு சந்திப்பு
சன.09,2014. அன்பர்களே, கேரளாவில் சுல்தான்பேட்டை என்ற ஒரு புதிய இலத்தீன் வழிபாட்டுமுறை
மறைமாவட்டத்தை கடந்த டிசம்பர் 28ம் தேதி உருவாக்கி அதன் முதல் ஆயராக, அருள்பணி பீட்டர்
அபீர் அவர்களை நியமித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தைச்
சார்ந்த புதிய ஆயர் அபீர் அவர்களின் ஆயர் திருப்பொழிவு திருப்பலி வருகிற பிப்ரவரி 16ம்
தேதியன்று நடைபெறவுள்ளது. புதிய ஆயர் அபீர் அவர்களை நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.