2014-01-08 15:35:48

இயேசு சபை அருள்பணியாளர் Linus Maria Zuchol அவர்கள் இறையடி சேர்ந்தார்


சன.08,2014. இந்தியாவின் வறியோர் மத்தியில் பல ஆண்டுகள் பணியாற்றிய இயேசு சபை அருள்பணியாளர் Linus Maria Zuchol அவர்கள், சனவரி 6, இத்திங்களன்று இரவு தன் 97வது வயதில் இறையடி சேர்ந்தார்.
1916ம் ஆண்டு இத்தாலியின் ஆல்ப்ஸ் பகுதியில் பிறந்த Zuchol அவர்கள், தன் 24வது வயதில் மறைமாவட்டக் குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டு, பின்னர், தன் 27வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார்.
ஜப்பானிலும், ஆப்ரிக்காவின் சில நாடுகளிலும் பணியாற்றிய அருள்பணியாளர் Zuchol அவர்கள், 1948ம் ஆண்டு, தனது 32வது வயதில் இந்தியாவுக்குச் சென்றார்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில், குறிப்பாக, கேரளாவில் பணியாற்றிய அருள்பணியாளர் Zuchol அவர்கள், வறியோருக்கென 10,000க்கும் அதிகமான வீடுகளைக் கட்டியுள்ளார்.
அருள்பணியாளர் Zuchol அவர்களின் அடக்கச்சடங்கு, சனவரி 8, இப்புதனன்று, அவர் 39 ஆண்டுகள் பங்குப் பணியாற்றிய மரியபுரம் என்ற ஊரில் நடைபெற்றது.

ஆதாரம் : MattersIndia








All the contents on this site are copyrighted ©.