முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பது
பலரும் அறிந்த உண்மை. அவர் திருஅவையின் தலைவராகப் பொறுப்பேற்ற சில மாதங்களில், ஒரு பத்திரிக்கை
நிருபர் அவரிடம், "திருத்தந்தையே, வத்திக்கானில் எத்தனை பேர் வேலை செய்கின்றனர்?" என்று
கேட்டார். சற்றுநேரம் சிந்தனையில் ஆழ்ந்த திருத்தந்தை, ஒரு புன்முறுவலுடன், "ஏறக்குறைய
பாதிபேர் வேலை செய்கின்றனர்" என்று கூறினார். வழக்கமாக, இத்தாலியில் அலுவலகங்கள்,
கடைகள் எல்லாம் பிற்பகலில் ஓயுவுக்காக மூடப்படும். இதை மனதில் கொண்டு மற்றொரு பத்திரிக்கை
நிருபர் திருத்தந்தையிடம், "வத்திக்கானில் அலுவலகங்கள் பிற்பகலில் மூடப்படுவதாகவும்,
அப்போது யாரும் வேலை செய்வதில்லை எனவும் சொல்கிறார்களே, உண்மையா?" என்று கேட்டார். திருத்தந்தை
அவரிடம், "அப்படியொன்றும் இல்லை... அலுவலகங்கள் பிற்பகலில் மூடப்படும். பணியாளர்கள் காலையில்
வேலை செய்வதில்லை" என்று குறும்புப் புன்னகையோடு சொன்னார். வருகிற ஏப்ரல் மாதம் புனிதராக
உயர்த்தப்படவிருக்கும் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், நகைச்சுவையும்
புனிதமும் இணைந்து வாழமுடியும் என்பதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.