2014-01-04 15:33:08

சனவரி 10-ல் மலாலா இந்தியாவிற்கு வருகை


சன.04,2014. இம்மாதம் 10ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 16 வயது மலாலா யூசாப்சாய், மியான்மார் நாட்டின் எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi, ஆகியோர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெறவுள்ள இந்திய மாணவப் பாராளுமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவ்விருவரும் வருகின்றனர் என மாணவர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் Rahul Karad தெரிவித்துள்ளா.
பெண் கல்வி, சமூகத்தில் இந்திய இளையோரின் முக்கியத்துவம், இளையோர் மத்தியில் அரசியல் போன்றவை குறித்து இவ்விழாவில் மலாலா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் பாகிஸ்தானில் பெண்கல்வியை ஊக்குவித்ததால் தலிபான்களால் சுடப்பட்டார்.
மேலும், மியான்மார் எதிர்கட்சித் தலைவர் Suu Kyi, 15 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்.

ஆதாரம் : The Times of India








All the contents on this site are copyrighted ©.