2014-01-02 15:49:50

வத்திக்கான் நாளிதழில் "பெண்கள், திருஅவை, உலகம்" என்ற ஒரு புதிய பகுதி


சன.02,2014. "பெண்கள், திருஅவை, உலகம்" என்ற ஒரு புதிய பகுதியை வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano, சனவரி 2, இவ்வெள்ளி முதல் துவக்கியுள்ளது.
பெண்களைக் குறித்த இறையியலை நாம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதைத் தொடர்ந்து, வத்திக்கான் நாளிதழ் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்று Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இறையியலில் புலமை பெற்ற பெண்களும், ஆண்களும் எழுதும் கட்டுரைகள் இப்பகுதியில் இடம்பெறும் என்றும், இதன் முதல் கட்டுரை, பேரருள்பணியாளர் Pierangelo Sequeri அவர்களால் எழுதப்பட்டுள்ளது என்றும் L'Osservatore Romano இதழின் இணை ஆசிரியர் அருள் பணியாளர் Lucetta Scaraffia அவர்கள் கூறினார்.
2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றம் குடும்பங்களை மையப்படுத்தி அமைந்துள்ளதையொட்டி, திருஅவையில் பெண்களின் பங்கு குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள இப்பகுதி துவக்கப்படுகிறது என்று அருள்பணியாளர் Scaraffia அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.