புத்தாண்டு வாழ்த்துக்கள்.... புலர்ந்துள்ள 2014ம் ஆண்டில் வத்திக்கான் வானொலி குடும்பத்தினர்
அனைவருக்கும், இன்னும் உலகில் வாழும் அனைவருக்கும் இறைவன் நிறைவான மகிழ்வையும் வளங்களையும்
தந்தருளவேண்டுமென்று வாழ்த்துகிறோம். செபிக்கிறோம். இப்புதிய ஆண்டில் இவ்வுலகம் அமைதியையும்,
அன்பையும் அதிகம் அதிகமாக அனுபவிக்கவேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டுவோம்.
அன்புள்ளங்களே,
இன்று நாம் கேட்கவிருக்கும் நிகழ்ச்சிகள்: புனிதரும் மனிதரே, மற்றும் புத்தாண்டு சிறப்பு
நிகழ்ச்சி.
புத்தாண்டு வாழ்த்துக்களை வழங்குபவர் இலங்கை யாழ்ப்பாண ஆயர் சவுந்தரநாயகம்
அவர்கள்...
புத்தாண்டுக்குரிய
சிறப்புச் செய்தியை வழங்குபவர், பாளையங்கோட்டை, புனித சேவியர் கல்லூரியில் ஆங்கிலத்துறைத்
தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர், முனைவர், ஜோசப் ஆல்பர்ட்
அவர்கள்.