வாரம் ஓர் அலசல் – 2013ம் ஆண்டை ஒருமுறை வலம் வருவோம்
டிச.30,2013. அன்புநேயர்களே, 2013ம் ஆண்டின் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளோம். நாள்கள்
வெகு வேகமாக உருண்டோடி விட்டதாகப் பலருக்குத் தெரிகிறது. இவ்வேளையில் உலகை, இந்தியாவை,
தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்த்து அலசுகிறார் பேராசிரியர் பெர்னார்டுசாமி. இவர் சென்னை
இலொயா கல்லூரியில் வரலாற்றுத்துறையில் பணியாற்றுகிறார். 2014ம் ஆண்டை அனைவரும்
நம்பிக்கையுடன் எதிர்நோக்குகின்றனர். நாடுகளில் சண்டைகள் இன்றி அமைதி நிலவவும், மக்களாட்சி
மலரவும், மக்கள் பசி,பட்டினி, நோயின்றி வாழவும் வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எல்லாரிலும்
இருக்கின்றது. நாமும் நம்பிக்கையோடு புதிய ஆண்டில் காலடி பதிப்போம்.