2013-12-30 15:08:01

மத்திய ஆப்ரிக்கக் குடியசிற்கான போரை அந்நாட்டுப் பேராயரும் இஸ்லாமிய தலைமைக்குருவும் இணைந்து அழைப்புவிடுத்துள்ளனர்


டிச.30,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியசிற்கான அனைத்துலக உதவிப்பணிகளின் ஓர் அங்கமாக 1,600 பிரான்ஸ் இராணுவ வீரர்கள் வந்துள்ளபோதிலும், வன்முறைகள் நிறுத்தப்பாடாத நிலையில், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உதவிக்கு அந்நாட்டுப் பேராயரும் இஸ்லாமிய தலைமைக்குருவும் இணைந்து அழைப்புவிடுத்துள்ளனர்.
ஐ.நா. அமைதி காப்புத் துருப்புகளின் உடனடித் தலையீடு தேவைப்படுகின்றது என அழைப்புவிடுத்த மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Bangui பேராயர் Dieudonné Nzapalainga, மற்றும் இஸ்லாமிய மத்த்தலைமைக் குரு Omar Kobine Layama, 'மத்திய ஆப்ரிக்கக் குடியரசு போரை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதற்கு மதமும் காரணங்கள் எனச் சொல்லப்படும் நிலையில், அந்நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டியது அனைத்துலகச் சமுதாயத்தின் கடமை என மேலும் உரைத்துள்ளனர்.
கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என செய்தி நிறுவனங்கள் கூறும்வேளை, Bangui நகரில் மட்டும் ஏறத்தாழ 60 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Bangui நகரில் இம்மாதத் துவக்கத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

ஆதாரம் : MISNA








All the contents on this site are copyrighted ©.