டிச.30,2013. 'இயேசு பாலனின் முகத்தில் நாம் தந்தையாம் இறைவனின் முகத்தைக் கண்டு தியானிக்கிறோம்.
வாருங்கள் அவரை ஆராதிப்போம்' என தன் இத்திங்கள் டுவிட்டர் பக்கத்தில் அழைப்புவிடுத்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். இலத்தீன், இத்தாலியம், ஆங்கிலம், அரபு, இஸ்பானியம், போலந்து,
செர்மானியம், போர்த்துக்கீசியம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் இக்கிறிஸ்துமஸ் காலத்தில் டுவிட்டர்
வழி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.