2013-12-30 15:07:37

இலஞ்ச ஊழல் மற்றும் வன்முறைகளைப் புறந்தள்ளிட பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் அழைப்பு


டிச.30,2013. பிலிப்பீன்ஸ் மக்கள் தங்கள் பழைய தீய வழிகளைக் கைவிட்டு 2014ம் ஆண்டை விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் வரவேற்கவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர்பேரவைத் தலைவர்.
பிலிப்பீன்ஸ் சமூகத்தை அலைக்கழித்துக்கொண்டிருக்கும் இலஞ்ச ஊழல் மற்றும் வன்முறைகளைப் புறந்தள்ளி, புத்தாண்டில் புதிய வாழ்வை மேற்கொள்ள விசுவாசிகள் முன்வரவேண்டும் என பிலிப்பீன்ஸ் ஆயர்கள் சார்பில் அழைப்புவிடுத்துள்ள ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Socrates Villegas, கடத்தல், வன்முறை, பயங்கரவாதம், இலஞ்ச ஊழல் போன்றவை நிறுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார்.
'மீண்டும் புதிதாகத் துவக்குவோம்' என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த புத்தாண்டு மேய்ப்புப்பணி சுற்றறிக்கை, சிரியா நாட்டின் அமைதிக்கான செபத்திற்கும் அழைப்புவிடுத்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.