திருத்தந்தையின் Twitter செய்தி : நம் அன்னைமரியா முழுமையும் அழகு, ஏனெனில் அவர் அருள்
நிறைந்தவர்
டிச.28,2013. நம் அன்னைமரியா முழுமையும் அழகு; ஏனெனில் அவர் அருள் நிறைந்தவர் என்று,
இச்சனிக்கிழமையன்று தனது Twitter செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும்,
வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லச்
சிற்றாலயத்தில் புதிய ஆண்டில் அவர் நிகழ்த்தும் காலைத் திருப்பலிகளில் உரோம் மறைமாவட்டத்தைச்
சார்ந்த பங்கு மக்கள் கலந்துகொள்வார்கள் என, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணி
பெதரிக்கோ லொம்பார்தி அறிவித்தார். உரோம் மறைமவாட்ட ஆயராகிய திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் தனது மறைமவாட்டத்திலுள்ள அனைத்துப் பங்குகளுக்கும் செல்ல முடியாது என்பதால்,
அம்மக்கள் தங்கள் ஆயரோடு தொடர்பு கொள்வதற்கு உதவியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக
அருள்பணி லொம்பார்தி கூறினார். வருகிற சனவரி 7ம் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் காலைத்
திருப்பலியில் ஏறக்குறைய 25 விசுவாசிகள் வீதம் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள் என்றும்
அருள்பணி லொம்பார்தி கூறினார்.