2013-12-26 15:40:35

தங்கள் மத நம்பிக்கைக்காக துன்புறுவோருக்கென, கிறிஸ்து பிறப்பு காட்சிக்கு முன்னர் சிறப்பாகச் செபிப்போம் - திருத்தந்தையின் Twitter செய்தி


டிச.26,2013. தங்கள் மத நம்பிக்கைக்காக துன்புருவோருக்கென, கிறிஸ்து பிறப்பு காட்சிக்கு முன்னர் சிறப்பாகச் செபிப்போம் என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்டார்.
கிறிஸ்துவின் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்காக உயிர் துறந்த முதல் மறை சாட்சியான புனித ஸ்தேவான் அவர்களின் திருவிழாவன்று திருத்தந்தை இச்செய்தியை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டி, திருத்தந்தை ஒன்பது மொழிகளில் வெளியிட்ட Twitter செய்தியில், கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்து நம்மிடையே வருகிறார்: ஆண்டவருடன் நேருக்கு நேர் தொடர்பு கொள்ள இது தகுந்த தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.