2013-12-26 15:43:25

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வழங்கிய கிறிஸ்மஸ் செய்தி


டிச.26,2013. மனித வாழ்வில் கிறிஸ்து கொணர்ந்த மேலான வாழ்க்கை நியதிகள் கிறிஸ்மஸ் பெருவிழாவினால் இவ்வுலகிற்குக் கிடைக்கட்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (Pranab Mukherjee) அவர்கள் கூறினார்.
இப்புதனன்று கொண்டாடப்பட்ட கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டி இந்திய மக்களுக்குச் செய்தி வழங்கிய குடியரசுத் தலைவர், அன்று பெத்லகேம் நகரில் ஒளிர்ந்த அமைதிச் சுடர் இன்று உலகெங்கும் வாழும் நல்ல மனதோர் உள்ளங்களிலும் சுடர் விடட்டும் என்று வாழ்த்தினார்.
இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்குக் கொணர்ந்த அன்பு, கருணை ஆகிய பாடங்களை அனைவரும் இந்த நன்னாளில் நினைவுகூர வேண்டும் என்று கூறிய இந்தியக் குடியரசுத் தலைவர், அனைவருக்கும் கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.