தென் சூடானில் இடம்பெற்று வரும் வன்முறை அரசியல் சார்ந்தது, ஆயர்கள்
டிச.20,2013. தென் சூடானில் இடம்பெற்று வரும் வன்முறைக்கு இனம் சார்ந்த பிரச்சனை அல்ல,
ஆனால் அரசியல் சார்ந்த பிரச்சனையே காரணம் என, அந்நாட்டின் திருஅவைத் தலைவர்கள் கூறினர். தென்
சூடான் ஆயர்கள் தொடர்ந்து வெளியிட்டுவரும் அறிக்கையில், அந்நாட்டு அரசும், அரசியல் தலைவர்களும்
வன்முறையைத் தூண்டும் செயல்களைக் கைவிட்டு குடிமக்களைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டுமாறும்,
நாட்டை அமைதியில் நடத்திச் செல்லுமாறும் வலியுறுத்தி வருகின்றனர். தென் சூடானின் மக்கள்
விடுதலைக் கட்சிக்கும், அந்நாட்டின் அரசியல் தலைவர்களுக்கும் இடையே அரசியல்ரீதியான முரண்பாடுகள்
இடம்பெறுவதாக ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே, தென் சூடானில் கடந்தவார இறுதியில்
மோதல்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 500 பேர் இறந்துள்ளனர் மற்றும் 34 ஆயிரம் பேர்
ஐ.நா. வளாகத்தில் அடைக்கலம் தேசியுள்ளனர். சூடானில் இடம்பெற்ற 22 வருட உள்நாட்டுச்
சண்டைக்குப் பின்னர் 2011ம் ஆண்டில் தென் சூடான் விடுதலை அடைந்தது.