திருத்தந்தை பிரான்சிஸ் : இந்தக் கிறிஸ்மஸ், நற்செய்தியை வாழ்வாக்குவதோடு ஒத்திணங்கிச்
செல்ல வேண்டும்
டிச.20,2013. இயேசுவை நம் வாழ்வின் மையத்தில் வரவேற்று, நற்செய்தியை வாழ்வாக்குவதோடு
ஒத்திணங்கிச் செல்வதாய் இந்தக் கிறிஸ்மஸ் அமைய வேண்டும் என, தனது டுவிட்டரில் இவ்வெள்ளிக்கிழமையன்று
செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். தினமும் ஒன்பது மொழிகளில் குறுஞ்செய்திகளை
எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் நற்செய்தியை வாழ்வில்
நடைமுறைப்படுத்துமாறு கேட்டுள்ளார். மேலும், இந்தியா மற்றும் நேபாளத்துக்கான திருப்பீடத்
தூதர் பேராயர் Salvatore Pennacchio அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார்
திருத்தந்தை பிரான்சிஸ்.