டிச.20,2013. மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பரிந்துரை
செய்துள்ள கஸ்தூரிரங்கன் அறிக்கையை, அமல்படுத்தும் நடவடிக்கைகளை, இந்திய மத்திய வனம்
மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் இவ்வெள்ளியன்று துவக்கியுள்ளது. இந்நடவடிக்கைகளை
கண்காணிக்க, உயர்மட்டக் குழு ஒன்று, விரைவில் ஏற்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொழிற்சாலை, சுரங்கம், குவாரி, நீர்மின்சக்தி
திட்டம் கட்டுமான பணிகளுக்கு, குறிப்பிட்ட அளவு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே,
கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள மலைகளில் பசுமை முயற்சிகளை மேற்கொள்ளும் ஒரு திட்டத்தின்
மூலம் 123 கிராமங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவர் என்று கேரள கத்தோலிக்கத் தலைவர்கள்,
காங்கிரஸ் கட்சித் தலைவர், சோனியா காந்தி அவர்களை இச்செவ்வாயன்று சந்தித்து தங்கள் கவலையை
தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.