நேபாள நாட்டில் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் திருத்தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
டிச.19,2013. திருத்தந்தையின் பிறந்தநாளையொட்டி, நேபாள நாட்டில் உள்ள மாவோயிச மற்றும்
கம்யூனிச கட்சிகளைச் சார்ந்தவர்கள் திருத்தந்தைக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர். நேபாள
நாட்டில் பல ஆண்டுகளாக வளர்ந்துவரும் வெறுப்பைக் களைந்து, அனைவரும் ஒப்புரவில் வளரும்
முயற்சிகளை மேற்கொள்வோம் என்ற உறுதியை இக்கட்சிகள் தங்கள் வாழ்த்துக்களுடன் திருத்தந்தைக்கு
அனுப்பியுள்ளனர். மதம், அரசியல், கொள்கைப் பற்று என்ற பல பிரிவுகளையும் தாண்டி, ஒப்புரவை
வளர்க்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறிவருவது தங்களைக்
கவர்ந்துள்ளது என்றும், கிறிஸ்மஸ் விழாவுக்கு முன்னர் நேபாள நாட்டில் ஒப்புரவு முயற்சிகள்
வெற்றிபெற உழைப்போம் என்றும், நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் Ram Chandra Poudel அவர்கள்
கூறியுள்ளார். பல்வேறு கொள்கைகளால் கருத்து வேறுபாடு கொண்டுள்ள கட்சிகள் அனைத்தும்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும் முயற்சியில் இணைந்த
வந்தது ஒரு நல்ல அடையாளம் என்று நேபாள கம்யூனிசக் கட்சித் தலைவர் Bam Dev Gautam அவர்கள்
கூறினார்.