2013-12-18 15:58:10

டிசம்பர் 18, ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அகில உலக நாளையொட்டி, லாம்பெதுசா படகில் இரு ஆயர்கள்


டிச.18,2013. இரு ஆயர்கள், நான்கு பாராளு மன்ற உறுப்பினர்கள், ஓர் அருள் சகோதரி ஆகியோர் ஒரு சிறு படகில் இத்தாலிய பாராளுமன்ற இல்லங்களைக் கடந்து செல்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 18, இப்புதனன்று கடைபிடிக்கப்படும் ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அகில உலக நாளையொட்டி, மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில், இத்தாலியின் தெற்குக் கோடியில் அமைந்துள்ள லாம்பெதுசா என்ற தீவுக்கு புலம்பெயர்ந்தொரைச் சுமந்து வந்திருந்த படகு ஒன்று பயன்படுத்தப்படுகிறது.
லாம்பெதுசா தீவுக்கும், இன்னும் உலகில் பல்வேறு கடற்கரை நகரங்களுக்கும் புகலிடம் தேடி வந்து சேரும் புலம்பெயர்ந்தோரின் ஆபத்தான பயணங்களையும், அவர்கள் சந்திக்கும் பாதுகாப்பற்றச் சூழலையும் நினைவுறுத்தவே அகில உலக புலம்பெயர்ந்தோர் நாளன்று இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.