2013-12-16 16:06:08

பாக்தாத் நகராட்சியின் முயற்சியால், Karrada என்ற நகரில் கிறிஸ்மஸ் மரம்


டிச.16,2013. ஈராக் நாட்டின் பாக்தாத் நகராட்சியின் முயற்சியால், Tigris நதியின் கிழக்குக் கரையில் அமைத்துள்ள Karrada என்ற நகரில் கிறிஸ்மஸ் மரம் ஒன்று வைக்கப்படவுள்ளது.
நாட்டைவிட்டு வெளியேறும் கிறிஸ்தவர்களைத் தடுத்து, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு முயற்சியாகவும், Karrada நகரில் கிறிஸ்தவ இஸ்லாமிய உறவு நல்முறையில் அமைந்துள்ளது என்பதைக் காட்டவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று பாக்தாத் நகராட்சி தெரிவித்துள்ளது.
15 அடி உயரமுள்ள இந்த கிறிஸ்மஸ் மரம் விரைவில் வண்ண விளக்குகளுடன் அமைக்கப்படும் என்று பாக்தாத் கலாச்சாரக் குழுவின் தலைவர் Salah Abdel Razaaq அவர்கள் கூறினார்.
2003ம் ஆண்டு ஈராக் நாட்டில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டின் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களின் வன்முறைகளுக்கு இலக்காகி வருகின்றனர்.
இதனால், 10 ஆண்டுகளுக்கு ஈராக்கில் 20 இலட்சம் என்ற அளவில் இருந்த கிறிஸ்தவர்கள், தற்போது 3 இலட்சமாகக் குறைந்துள்ளனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.