2013-12-16 16:05:49

கொலராடோ உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டென்வர் பேராயர் ஆழ்ந்த வருத்தம்


டிச.16,2013. அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் அடிக்கடி நடைபெறும் அர்த்தமற்ற வன்முறைகள் நம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகிறது என்று டென்வர் பேராயர் Samuel Aquila அவர்கள் கூறினார்.
டிசம்பர் 13, கடந்த வெள்ளியன்று கொலராடோவின் Arapahoe உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்த பேராயர் Aquila அவர்கள், கிறிஸ்து பிறப்பு விழாவை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம், நாட்டின் இளையோரைச் சிறப்பாக நினைத்து, செபங்களை எழுப்புவோம் என்று கேட்டுக் கொண்டார்.
2100 மாணவர்களைக் கொண்ட Arapahoe பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மூவர் காயமடைந்தனர் என்றும், இந்த வன்முறையை மேற்கொண்டவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்தார் என்றும் கூறப்படுகிறது.
A பள்ளிக்கு எட்டு மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள Columbine உயர்நிலைப் பள்ளியில், 1999ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 15 பேர் இறந்தனர். மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, Connecticut மாநிலத்தில் Sandy Hook என்ற பள்ளியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 20 குழந்தைகளும், 6 ஆசியர்களும் கொல்லப்பட்டனர்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.