திருத்தந்தையின் பெயரால் ஏழைகளுக்கு கிறிஸ்மஸ் நன்கொடை
டிச.14,2013. கிறிஸ்மஸ் பெருவிழாவையொட்டி வருகின்ற நாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் பெயரால் ஏழைகளுக்கு சிறிய நன்கொடைகளை வழங்குவார் பேராயர் Konrad Krajewski. ஏழைகளுக்குப்
பயன்படும் பொருள்களைக் கொண்ட இரண்டாயிரம் சிறிய பைகள், அன்றாடம் ஏழைகளுக்கு உணவளிக்கும்
அன்னை தெரேசா சபையினரின் இல்லங்கள் போன்ற இடங்களில் கொடுக்கப்படும். இச்சிறிய பைகளில்,
குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை அனுப்ப உதவும் வத்திக்கான்
தபால்தலைகள் ஒட்டப்பட்ட கவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையெழுத்திட்ட ஒரு படம்,
உள்ளூர் பேருந்தில் செல்வதற்கு உதவும் பயணச் சீட்டு போன்றவை அப்பையில் இருக்கும். அட்டாக்
என்ற உரோம் அரசு பேருந்து நிறுவனம் 4,000 பயணச் சீட்டுக்களை வழங்கியுள்ளது. திருத்தந்தையின்
பெயரால் தர்மம் அளிப்பதற்கென 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால்
நியமிக்கப்பட்டவர் போலந்து நாட்டைச் சார்ந்த பேராயர் Konrad Krajewski