டிச.13,2013. மார்புப் புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்பட்டுவருவது அதிகரித்துவரும்வேளை,
இப்புற்றுநோயால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது என்று இவ்வியாழனன்று
அறிவித்தது உலக நலவாழ்வு நிறுவனம். உலகில் கடந்த ஆண்டில் ஒரு கோடியே 40 இலட்சத்துக்கு
மேற்பட்ட பெண்கள் மார்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர், 2008ம் ஆண்டுக்குப் பின்னர்
இது 20 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும், இதே கால இடைவெளியில் இந்நோயால் இறந்த பெண்களின்
எண்ணிக்கையும் 14 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் அந்நிறுவனம் மேலும் கூறியது. தொழிற்சாலை
நாடுகளில் மாறிவரும் வாழ்க்கைமுறையே இதற்குக் காரணம் என்றும் உலக நலவாழ்வு நிறுவனம்
தெரிவித்தது.