டிச.12,2013. அன்பு நேயர்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Evangelii Gaudium அதாவது
நற்செய்தியின் மகிழ்ச்சி என்ற தனது முதல் திருத்தூது அறிவுரையை கடந்த நவம்பர் 26ம் தேதியன்று
வெளியிட்டார். முன்னுரை உட்பட ஐந்து பிரிவுகளாக, ஐம்பதாயிரம் சொற்களைக் கொண்ட இந்த ஆவணத்தின்
சொல்லாடலை நான்கு பகுதிகளாகத் தருகிறோம். இந்த நான்கு பகுதிகளையும் வழங்குபவர் அருள்பணி
அ.பணி.மைக்கிள் ஜெயராஜ் இயேசு சபை. இவர் இயேசு சபை மதுரை மாநில முன்னாள் தலைவர். இன்று
அதன் முதல் பகுதியை நீங்கள் கேட்கலாம்.