2013-12-11 15:37:15

தான் இவ்வுலகில் சந்தித்த அனைத்து மனிதர்களிலும் மண்டேலா அவர்கள் தலை சிறந்தவராக இருந்தார் - மறைந்த கர்தினால் Martini


டிச.11,2013. தன் வாழ்வில் சந்தித்த அனைத்து மனிதர்களிலும் நெல்சன் மண்டேலா அவர்கள் தலைசிறந்த இடத்தை வகிக்கிறார் என்று மறைந்த கர்தினால் Carlo Maria Martini அவர்கள் கூறியதை வத்திக்கான் வானொலி இயக்குனரான அருள்பணி Federico Lombardi அவர்கள் நினைவு கூர்ந்தார்.
பழி உணர்வு துளியும் இல்லாமல், முழுமையான அமைதியில் வாழ்ந்த நெல்சன் மண்டேலா அவர்களே தான் இவ்வுலகில் சந்தித்த அனைத்து மனிதர்களிலும் தலை சிறந்தவராக இருந்தார் என்று கர்தினால் Martini அவர்கள் அளித்த பேட்டியை அருள்பணி Lombardi அவர்கள் இச்செவ்வாயன்று நினைவு கூர்ந்தார்.
டிசம்பர் 5ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்த நெல்சன் மண்டேலா அவர்களுக்கு Johannesburg மாநகரில் டிசம்பர் 10, இச்செவ்வாயன்று நடைபெற்ற நினைவு வழிபாட்டில் 70க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
நான்கு மணிநேரங்கள் நடைபெற்ற இந்த நினைவு வழிபாட்டில் 80,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர் என்றும், டிசம்பர் 15, வருகிற ஞாயிறன்று மண்டேலா அவர்களின் அடக்கச் சடங்கு அவர் பிறந்த ஊரான Qunu எனுமிடத்தில் நடைபெறும் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.