திருத்தந்தை பிரான்சிஸ் : மரியே, இன்னல்நிறைந்த நேரங்களில் எமக்கு ஆதரவாயிரும்
டிச.10,2013. மரியே, எம் அன்னையே, இருளான, இன்னல்நிறைந்த மற்றும் தோல்வியை உணரும் நேரங்களில்
எமக்கு ஆதரவாயிரும் என, இச்செவ்வாயன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். மேலும், உலக அளவில் முகநூல் பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிகம் அளவில்
பேசப்படுபவர்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முதலிடத்தில் உள்ளார் என, அண்மை ஆய்வு
ஒன்று கூறுகிறது. Twiplomacy நிறுவனம் எடுத்துள்ள ஆய்வில், உலகின் 120 கோடி முகநூல்
பயன்பாட்டாளர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் பற்றி அதிகம் பேசி வருகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.
டுவிட்டரிலும் அதிகச் செல்வாக்குள்ள உலகத் தலைவர்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
முன்னிலை வகிப்பது ஏற்கனவே வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.