2013-12-09 16:50:29

கறுப்பினத்தலைவர் மண்டேலா சிறப்பு நினைவு நிகழ்வுக்கு திருத்தந்தையின் பிரதிநிதி


டிச.,09,2013. மறைந்த முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் நினைவாக இச்செவ்வாயன்று தென்னாப்ரிக்காவின் Johannesburgல் இடம்பெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்ள, தன் பிரதிநிதியாக கர்தினால் பீட்டர் டர்க்சனை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மறைந்த அதிபர் மண்டேலாவின் உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த அதிகாரப்பூர்வ நிகழ்வில் திருத்தந்தையின் சார்பில் பங்குபெறுவார் திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன்.
இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.