Casa Meter குழந்தைகள் இல்லத்துக்கு திருத்தந்தை பிரான்சிஸ் வாழ்த்து
டிச.09,2013. வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென இத்தாலியில் தொடங்கப்பட்டுள்ள
Casa Meter என்ற இல்லத்துக்கு தன் வாழ்த்துக்களையும் செபத்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். இத்தாலியின் Avola எனுமிடத்தில் அமலமரி திருவிழாவான இஞ்ஞாயிறன்று அருள்பணி
Forutano di Noto வால் தொடங்கப்பட்டுள்ள, வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சிறார்க்கான Casa
Meter இல்லத்துக்கு, திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின்
அனுப்பியுள்ள செய்தியில், குழந்தைகளுக்கான தாராளமனதுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்பணி,
பிறரன்பு மற்றும் உண்மையான அக்கறையுடன் தொடரப்பட வேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் விரும்புவதாகக்
கூறப்பட்டுள்ளது. இத்தாலியின் சிசிலித் தீவில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கத்தோலிக்க
இல்லம், வன்முறைகளுக்கு உள்ளான குழந்தைகள் மற்றும் அவர்கள் குடுமப நலனில் அக்கறை கொண்டு
பணியாற்ற உள்ளது.