2013-12-07 15:29:59

திருத்தந்தை பிரான்சிஸ் : அன்பு இளையோரே, உங்களின் திறமைகளை நற்செய்திப்பணிக்குப் பயன்படுத்துங்கள்


டிச.07,2013. அன்பு இளையோரே, படைப்பாற்றல் மற்றும் எல்லையற்ற பிறரன்புடன் உங்களின் திறமைகளை நற்செய்திப்பணிக்குப் பயன்படுத்துங்கள் என்று இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், உலக வர்த்தக நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள வணிகத்தை எளிதாக்கல் உடன்பாடு, இருபக்க வெற்றி கொணருவது, ஏனெனில் இது வளர்ந்த நாடுகளுக்கு, குறிப்பாக, வளரும் நாடுகளுக்குப் பயனுடையது என்று பேராயர் சில்வானோ தொமாசி, உலக வர்த்தக உடன்பாடு பற்றிக் கூறியதை, திருப்பீடச் செயலகம் @terzaloggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.