2013-12-07 15:35:13

Evangelii Gaudium நற்செய்தியை இன்னும் ஆழமான விதத்தில் அறிவிப்பதற்கு இந்திய திருஅவைக்கு அழைப்புவிடுக்கின்றது, பெங்களூரு பேராயர்


டிச.07,2013. Evangelii Gaudium என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அண்மை மறைத்தூது அறிக்கை, நற்செய்தியை புதிய வழியில் இன்னும் ஆழமான விதத்தில் அறிவிப்பதற்கு இந்திய திருஅவைக்கு அழைப்புவிடுக்கின்றது என்று பெங்களூரு பேராயர் பெர்னார்டு மொராஸ் கூறினார்.
வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து அண்மையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றியுள்ள பேராயர் மொராஸ், தனது போதனையை வாழும் எளிமையான வாழ்வுக்குச் சான்றுபகரும் திருத்தந்தையாக, திருத்தந்தை பிரான்சிஸ் உள்ளார் என, தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
பெங்களூரு, ஆசியாவில் வெகு வேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாக, அதன் மக்கள்தொகை ஒரு கோடியை எட்டியுள்ள நிலையில், இந்த உயர்மறைமாவட்டத்தில் தனது மறைப்பணி பற்றியும் ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டார் பேராயர் மொராஸ்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.