2013-12-04 16:46:06

சிரியாவில் கடத்தப்பட்டுள்ள ஆர்த்தடாக்ஸ் அருள்சகோதரிகளுக்காக திருத்தந்தை செபம்


டிச.04,2013. சிரியாவில் ஆயுதம் ஏந்திய மனிதர்களால் இரு நாள்களுக்கு முன்னர் கடத்தப்பட்டுள்ள புனித தேக்ளா துறவு இல்லத்தின் கிரேக்க-ஆர்த்தடாக்ஸ் அருள்சகோதரிகளுக்காகச் செபிப்போம் எனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் மாலையில் Maaloulaவில் கடத்தப்பட்டுள்ள 12 கிரேக்க-ஆர்த்தடாக்ஸ் அருள்சகோதரிகளுக்காகவும், சிரியாவில் இடம்பெறும் சண்டையில் கடத்தப்பட்டுள்ள மற்ற அனைவருக்காகவும் செபிப்போம் என, இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிரியாவில் அமைதி இடம்பெற வேண்டுமென்று தொடர்ந்து செபிப்போம் மற்றும் அமைதிக்கான செயல்களில் நாம் ஒன்றிணைந்து ஈடுபடுவோம் எனவும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.